search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கடல் சங்கமம் கடற்கரை"

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • இந்தப் பணி நாள்தோறும் நடைபெறும் என்று அறிவிப்பு.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டப சாலை உள்பட பல பகுதிகளில் அன்றாடம் தேங்கும் குப்பைகளை அகற்றும் தூய்மைப்பணி முகாம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நடந்தது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அலுவலர் முருகன், கவுன்சிலர் ஆனிரோஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தூய்மைப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கும் சூழ்நிலையில் பேரூராட்சி பகுதிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் நோக்கத்தில் இந்தப்பணி நாள்தோறும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    • கன்னியாகுமரி கடற்கரையில் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.
    • சுசீந்திரம் காசி திருப்பனந்தாள் திருமடத்தைச்சேர்ந்த தம்பையா ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி

    கன்னியாகுமரி:

    வைகாசி பவுர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு பஜனையும் அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாடசாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதில் சுசீந்திரம் காசி திருப்பனந்தாள் திருமடத்தைச்சேர்ந்த தம்பையா ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    5 .15 மணிக்கு பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடக்கிறது. 5.30மணிக்கு சித்திரகுப்தர் பூஜை மற்றும் சாதுக்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடக்கிறது. 5.30மணிக்கு சப்தகன்னிகள் பூஜை நடக்கிறது.

    பின்னர் நடக்கும் நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத் தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்குகிறார்.

    பொதுச்செயலாளர் டாக்டர்சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர்செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியாசெல்வி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். 6.30மணிக்கு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.

    6 45 மணிக்கு சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல்அன்னைக்கு தீபம் காட்டுகிறார்கள்.இறுதியாக இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர்எஸ். ராஜகோபால், பொதுச்செயலாளர் எஸ்.சிவசுப்பிரமணிய பிள்ளை, பொருளாளர் செந்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுசுயா செல்வி, எம். சந்திரன், எம். கோபி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ×